சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “காலி உரையாடல் -2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாடு தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் சுமார் 38 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Sep 2017