வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

ஈரான் இருந்து இந்தியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த ‘MV Gascut’என எரிவாயு கொண்டு செல்லும் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையினர் நேற்று(ஒக்டோம்பர் 01) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.

இறந்த வெளிநாட்டவர் 24 வயதான துருக்கி தேசத்தில் சேர்ந்த டெலில் எர்ரலின் ஆவார். இவர் இக் கப்பலின் மின்னியல் வல்லுநராக பணியாற்றி இருக்கிரார். இதை பற்றிய விடயங்கள் கடற்படையினருக்கு தெரிவித்த பின் தென் கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட பீ 490 அதிவேக படகு கடலுக்கு புறப்பட்டது.

இவர் மின் அதிர்ச்சி காரனத்தினால் இறந்துள்ளதாக சந்தேகப்படுகிறது. அம்பாந்தோட்டை ருகுணு மாகம்புர துறைமுகத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல்கள் தூரத்தில் இறந்தவரின் சடலத்தை கடற்படையினர் பொருப்பெடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொன்டுவந்த பின் சடலம் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.