இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் எடிதர II  அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஒக்டோபர் 04) நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் சுமார் 11.8 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04  இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின்  ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன்துறை  இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.