‘சயுருசர’ எனும் 34 வது சஞ்சிகை கடற்படை தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 34வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (ஒக்டோபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது கடற்படை உதவியாளர் மற்றும் ‘சயுருசர’ கட்டுரையில் ஆலோசகரான கேப்டன் அனுர தனபால, கடற்படை தளபதியின் ஊடக மற்றும் சயுருசர சஞ்சிகையின் ஒருங்கிணைப்பாளர் கொமான்டர் (ஆயுதங்கள்) லங்காநாத திசானாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் கடற்படையினரின் அறிவு, திறமை மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட சமூகத் திட்டங்கள் உட்பட குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் பற்றி கடற்படையினர் தெரிந்து கொள்ளும் வகையில் கடற்படை தளபதியின் ஆலோசனையில் குறித்த இச் சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.