இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று (ஒக்டொபர் 11) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம உட்பட அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் மன்னார் கலங்கரை விளக்கிற்கு சுமார் 11.5 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்துக்கும் கொன்டுவரப்பட்டது. குறித்த இந்திய மினவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.