கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 11) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டது. குறித்த படகுகள் காங்கேசன்துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் அப்படகுககள் பழுதுபார்க்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் செப்டம்பர் 30 ஆம் திகதி இருந்து இன்று வரை கைப்பற்றப்பட்ட 20 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை கடற்படையின் கன்கானிப்பு கப்பல்கலான “எடிதர II” வின் உதவியுடன் குறித்த படகுகள் வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘அமேயா’ கப்பல்கலிடம் ஒப்படைக்கப்பட்டது.