புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 01) இடம்பெற்றது.

கடற்படையின் 22ஆவது புதிய தளபதியாக தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர், பாதுகாப்பு செயலாளருடன் முதற்தடவையாக உத்தியோகபூர்வ சந்திபொன்றை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பின்போது, அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், பாதுகாப்பு செயலாளர் அவர்கள் புதிய கடற்படைத் தளபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டடன.