சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையினரின் உதவி
 

அண்மையில் (நவம்பர், 03) கடும் சுகவீனம் காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து “லக்மால் புதா ” எனும் பல நாள் மீன்பிடிப்படகில் மீன்பிடித்தலுக்காக கடலுக்குச்சென்றிருந்த மீனவர் ஒருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக அவதியுற்றதை அறிந்து கொண்டதையடுத்தடு அவருக்கு கடற்படையினர் உதவியுள்ளது.

மேற்படி மீனவர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற அவசர தகவலுக்கு அமைய காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 16 கடல் மைல்கள் சென்று சம்பவ இடத்தை அடைந்த இலங்கை கடற்படையின் பி 414 ரக அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்கென உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கும் கடற்படை உதயளித்துள்து.