பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான “பிஎன்எஸ் சைப்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (நவம்பர்,05) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன.

123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 255 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் புதன்கிழமை (நவம்பர்,05) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.