பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் இல் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (நவம்பர் 05) இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் இல் கட்டளை அதிகாரி கேப்டன் ஹவ்சாட் இக்பால் அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு அவர் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் பாகிஸ்தானிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி அவர்களும் கழந்துக்கொன்டார்.