புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற் படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க அவர்கள்இன்று (நவம்பர் 06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இவ்வாறு வருகை தந்த புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு இலங்கை இராணுவம் சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது. வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் இராணுவத் தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு முதலில் இராணுவத் தளபதி அவரது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக பல இராணுவ மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.