சீன கடற்படை மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

சீன கடற்படை பணி கட்டளை அதிகாரி மற்றும் டாலியன் கடற்படை அகாடமி பணிப்பாளர் ரியர் அட்மிரல் யென் சென்க்மின் மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள கி ஜி குஆன்க் எனும் சீன கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி யே கயிந்ஹா ஆகியோர் இன்று (நவம்பர் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு அவர்கள் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.