சீன கடற்படை அதிகாரிகளுக்ககாக இலங்கை கடற்படை அதிகாரிகளினால் கலாசார நிகழ்வு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள 'குய் ஜி குவாங்' எனும் சீன கடற்படை கப்பலின் அதிகாரிகளுக்கான கலாசார நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்து நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கள அதிகாரி இல்லத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கடற்படை அதிகாரிகளுக்கான கலாச்சார நிகழ்வில் இன்னிசை பல இசைக்கப்பட்டன. அத்துடன் இணைந்த தாக பல நிகழ்ச்சிகள் இக்கலாச்சார நிகழ்வை அலங்கரித்தன. இந்நிகழ்வுகளில் சீன அதிகாரிகளும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுக்கு சிறப்பான இரவு விருந்தும் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் உட்பட மூத்த அதிகாரிகள், சீன கடற்படை பணி கட்டளை அதிகாரி மற்றும் டாலியன் கடற்படை அகாடமி பணிப்பாளர் ரியர் அட்மிரல் யென் சென்க்மின், கி ஜி குஆன்க் எனும் சீன கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி யே கயிந்ஹா, இலங்கையின் சீன பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் சூ ஜியான்வெய் ஆகியோர் உட்பட பல சீன கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டனர்.