இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் இன் லீ அவர்கள் இன்று (நவம்பர் 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு கர்னல் இன் லீ அவர்கள் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.