இலங்கை கடற்படை கப்பல் சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பல்களான சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் இன்று (நவம்பர் 20) தங்களுடைய பதவிகளில் கடமையேற்றன.

அதின் பிரகாசமாக சக்தி கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (நீர் முழ்கி) பிரபாத் பெனான்டஸ் அவர்கள் மற்றும் வீரயா கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கொமான்டர் (ஏஎஸ்டப்) சுதேஷ் விதானகே அவர்கள் தங்களுடைய பதவிகளில் கடமையேற்றினார்கள். கப்பல்களில் முன்னாள் கட்டளை அதிகாரிகளான கேப்டன் (சமிக்ஞைகள்) மஹிந்த மஹவத்த மற்றும் லெப்டினன்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) சந்திம சாந்த ஆகிய அதிகாரிகளினால் புதிய கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படை பாரம்பரியமாக கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தின் எண் 1 கப்பல் துறையில் இடம்பெற்ற சக்தி கப்பலின் கட்டளை அதிகாரியின் ஒப்புடைப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சநத் உத்பல அவர்கள் கழந்துகொன்டார். வீரயா கப்பலின் கட்டளை அதிகாரி ஒப்படைப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் நிகழ்வு திருகோனமலை கடற்படை போர் துறை புதிய கப்பல் துறையில் இடம்பெற்றது. கப்பலின் முன்னால் கட்டளை தளபதிகளின் பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் புதிய கட்டளை அதிகாரி கடமையேற்பு

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கை கடற்படை கப்பல் வீரயாவின் புதிய கட்டளை அதிகாரி கடமையேற்பு