சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 04) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் தலை மன்னார் கலங்கரை விளக்குக்கு வடக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 03 படகுகள், 02 சட்டவிரோத வலைகள் மற்றும் பிடிக்கப்பட்டுள்ள 330 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்டுள்ள மீன் தலை மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடமும் குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.