வங்காளம் கடற்படை கப்பல் பிஜோய் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடற்படை கப்பல் பிஜோய் இன்று (டிசம்பர் 06) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. இன் நிகழ்வுக்காக இலங்கையில் பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கமடோர் சய்ட் மக்சுமல் ஹகீம் அவர்கள் கழந்துகொன்டார்.

மேலும், எதிர் வரும் டிசம்பர் 08 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.