இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்புි
 

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அஹமட் ஜாவட் அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கனேடிய உயர் ஸ்தானிகருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.