இந்திய விமானப்படை தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தன்துள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். அங்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி அவரை அன்பாக வரவேற்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படை தளபதியவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் மற்றும் இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.