ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரெ அவர்கள் இன்று (டிசம்பர் 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.