சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் கேரல கஞ்சா வைத்திருந்த காரணத்தினால் 03 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 17) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் அருகம்பே கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 02 படகுகள், 02 சட்டவிரோத வலைகள் உட்பட மீன்பிடி பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் படி கடந்த டிசம்பர் 15 திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நச்சிகுடா பகுதியில் வைத்து 4.2 கிலோ கிராம் கேரல கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.