வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்களும் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் எனும் இரு கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 18) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு வந்த கப்பல்களின் பணியாளர்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் பல நிகழ்வுகளில் மற்றும் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள நட்பு கைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றனர்.