ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் “செடோகிரி” திருகோனமலை துறைமுகத்துக்கு வருகை
 

ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் (JMSDF) செடோகிரி நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (டிசம்பர் 20) திருகோனமலை துறைமுகத்துக்கு வந்துள்ளது. வந்தடைந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது.

துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படையின் ஏழாவது பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரி கேப்டன் சுசுமு மோரியானா கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் டகேஷி டோனெகாவா ஆகிய அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன மற்றும் கொடி கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையில் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரெ அவர்களும் கழந்துக்கொண்டார்.

எதிர் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.