கடற்படை பாய்மர படகு அணிக்கி பல வெற்றிகள்
 

இலங்கை மோட்டார் பாய்மர படகு சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட திறந்த பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த தொடரில் கடற்படை பாய்மர படகு அணி பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டித்தொடருக்கு 47 பாய்மர படகுகளுடன் 61 விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. அங்கு ஜிபி 14 பிரிவின் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களும் எண்டர்பிரைசஸ் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும் லேசர் ச்டான்டட் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும் லேசர் ரேடியல் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களும் கடற்படை பாய்மர படகு அணி வெற்றி பெற்றுள்ளது.