கெரவலபிட்டியவில் இடம்பெற்ற தீ கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்
 

இலங்கை கடற்படையினர் கடந்த இரவு (ஜனவரி, 05) கெரவலபிட்டிய வில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர். கெரவலபிட்டிய குப்பை மேட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையின் இரண்டு தீயணைப்பு குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டது.

இக்குழுவினர் மேற்கொண்ட பாரிய முயற்சியின் பின்னர் அப்பகுதியில் மேலும் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.