நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி,29) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருகோனமலை கொப்பெ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்றிருந்த தனுஷ்க புதா எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்பாக இலங்கை பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இம்மீன்பிடி படகு 8.5 கடல மைல்கள் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான P 465 அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட நபர் திரு கோனமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோனமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.