கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி
 

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (பெப்ரவரி,21) இடம்பெற்றது. இவ்வைபவத்தில் இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் திரு. என். வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இன் நிகழ்வுக்காக வட கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் செனரத் விஜேசூரிய, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், விஐபி நபர்கள், கடற்படையினர் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர். குறித்த இறங்குதுறை, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சின் நிதி உதவியின் மூலம் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. மேலும் இது இலங்கையின் கடற்படையின் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்ற மற்றொரு சமூக நலன்புரி நோக்குடைய திட்டமாகவும் அமைகின்றது.

இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்ததன் மூலம் மீன்பிடி படகுகள், பயணிகள் படகுகள் மற்றும் கடல் அம்பியுலன்ஸ் ஆகியன எளிதில் பயனிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.