இலங்கை கடல் எல்லை மீறிய 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 109 இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 06 இலங்கை மீனவர்கள் மீண்டும் அந் நாட்டுகளுக்கு ஒப்படைப்பு இன்று (பெப்ருவரி 20) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

குறித்த மீனவர்கள் மீன்டும் ஒப்படைப்பு பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடைபெற்றது. குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்களான எடிதர II,விக்ரம II, பிரதாப மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 409 கப்பல் கலந்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் இன்று பகல் இந்திய கடலோர காவல்படையின் ஆதுல்யா மற்றும் ரானி துர்காவதி ஆகிய கப்பல்கலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.