வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடமையேற்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று  (பிப்ருவரி 25) தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால்இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.

அங்கு ரியர் அட்மிரல் விக்கிரமசிங்க அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய வடக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் தமது 34  வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து இன்று ஓய்வு பெற உள்ளார். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.