தென் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் கடமையேற்பு
 

தென் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 28) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார். மேலும் இதுக்கு முன் ரியர் அட்மிரல் கபில சமரவிர அவர்கள் கொடி அதிகாரியாக கடற்படை கொடி கட்டளையில் கடமையாற்றினார்.

அங்கு ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமை யேற்க உள்ளார். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.