பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி
 

அண்மையில் (மார்ச் 03) பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு வடக்கு கடற்படை கட்ளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை உதவியுள்ளது.

இந்த ஆண்டு விழாவுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு, குறுநகர், நாவாந்துறை, பாசையூர், வலைப்பாடு, இரனைமதநகர், பள்ளிக்குடா, மாந்ததீவு, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பருத்தித்துறை, மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 10,000 க்கு மேற்பட்ட கத்தோலிக்க பக்தர்கள் வருகைதந்திருந்தனர். குறித்த பண்டிகையில் யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி ஜெஸ்டின் பெர்னாட் ஞானபிரகாசம் அவர்களால்  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் அறிவுரைகள் படி இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வாவின் மேற்பார்வையின் கீழ் குறித்த நிகழ்விற்கு வருகைதந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், முகாம்கள் அமைத்தல், உணவு, மருத்துவ வசதிகள், கடல் ஆம்புலன்ஸ், சுகாதார மற்றும் குடிநீர் வசதிகள், ஆகியவற்றுடன் பக்தர்கள் பாதுகாப்புக் கருதி விஷேட கடற்படை பிரிவின் உயிர் காக்கும் படையினர் சேவையும் வழங்கப்பட்டது.