பங்களாதேஷ் கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான "பிஎன்எஸ் பங்கபந்து" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு இந்றையதினம் (மார்ச்,22) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

233 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ள 103.7 மீட்டர் நீளமான "பிஎன்எஸ் பங்கபந்து' கப்பலானது 2407 தொன்கள் எடையினையுடையதும் 233 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. எதிர் வரும் ஞாயிறன்று நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.