இலங்கை கடற்படையின் 231 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 231 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 379 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (ஏப்ரல் 07) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் துனை தளபதி மற்றும் பயிற்சி நிர்வாகி கமான்டர் சுமேத ஹிடிநாயக்க அவர்கள் உட்பட மற்ற மத குருமார்கள், கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. அப்போது 231 வது ஆட்சேர்ப்பில் டப்.எஸ்.எஸ். விஜேரத்ன சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார் டப்.பி.டி டெப் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார். எல்.எம்.அய்.டி விஜேசேகர சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எஸ்.ஏ.எஸ.யு ரூபசிங்க சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றார்.