பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா திருகோணமலை கடற்படை முகாமில் இடம்பெற்றது
 

பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை தொடக்கும் விழா நேற்று (ஏப்ரல் 25) கிழக்கு கடற்படை கட்டளையின் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல, இயக்குனர் மரைன் படை பிரிவின் மற்றும் இயக்குனர் கடற்படை தரை நடவடிக்கை ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க, அமெரிக்க தூதரகத்தில் துணைத் நடவடிக்கைகளில் பிரதானி ரொபட் ஹில்டன், மேர்சி கப்பலின் கட்டளை அதிகாரி கொமடோர் டேவிட் பெஸ்ட் ஆகியோர் உட்பட அமேரிக்கா, பெரு, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இராணுவத்தினர், இலங்கை விமானப்படை, இலங்கை இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.