இந்திய இராணுவ பிரதானி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இரானுவ தளபதி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று மே மாதம் 16 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார். அங்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்து அவரை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களால் வரவேற்கப்பட்டது.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் இன்நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.