இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி - SLINEX 2018 க்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
 

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இடையில் நான்காவது முறையாக நடைபெறுகின்ற இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி (Sri Lanka India Naval Exercise - SLINEX 2018) க்காக திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநாடு கடந்த மே மாதம் 29 மற்றும் 30 திகதிகளில் விஷாகபட்டனமில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையில நடைபெற்றது.

இன் நிகழ்வுக்காக இந்திய கடற்படை கப்பல் ரன்ஜித்தில் கட்டளை அதிகாரி கேப்டன் விக்ரம் மெஹேரா அவர்கள் மற்றும் ரன்ஜித் ஷர்மா அவர்கள் கழந்துகொன்டதுடன் இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை கொடி கட்டளையின் கடல் பயிற்சி அதிகாரி கேப்டன் பிரதீப் ரத்னாயக்க, இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரயின் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தன கடற்படை பணியாளர்கள் அதிகாரி (நடவடிக்கைகள்) கொமான்டர் நதுன் குனசேன மற்றும் இந்தியாவில் இலங்கை உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் சுரேஷ் த சில்வா

குறித்த கூட்டு கடற்படை பயிற்சி ஆகஸ்ட் மாதம் 27 முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. மேலும் குறித்த போர் பயிற்சி இலங்கை கடலோரப் பகுதியில் இரண்டாவது தடவையாக நடைபெறும். இரு நாடுகளில் பல போர் கப்பல்கள் இதுக்காக கழந்துகொள்ள உள்ளது. குறித்த கடற்படை பயிற்சி மூலம் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த, கடல் வெடிப்பொருட்களின் ஒருங்கிணைப்பு, ஊடாடும் திறமைகளை வளர்ப்பதற்கு, கப்பல்கள் இடையில் தனிநபர்கள் மற்றும் பொருட்களுக்கும் பரிமாறித்தல். இது மூலம் இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பராமரிக்க ஒரு பெரிய உதவியாக இருக்கும்.