பிரான்ஸ் கடற்படையின் இரு கப்பல்கள் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான 'டிக்ஸ்முட்' மற்றும் 'சர்கௌப்' ஆகிய கப்பல்கள் இன்றையதினம் (ஜுன், 18) இலங்கைக்கு வருகைதந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல்களுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

மேலும் டிக்ஸ்முட் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜின் போசர் அவர்களும் சர்கௌப் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமான்டர் கிரிஷ்டின் ரிபே அவர்கள் பணியாற்றிகிரார்கள். அதன் பிரகாரமாக இது பென் அதிகாரியொருவர் கட்டளையளிக்கும் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த முதல் தடவையாகும். இலங்கை கடற்படையின் பென் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய முதல் தடவையும் இதுவாகும். குறிப்பிட்ட கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும், தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின் 10 அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் கடற்படை வீரர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு கப்பல்களின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.