பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் (General Zubair Mahmood Hayat) இன்று (ஜூன் 28) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்டு மேற்கொன்டுள்ளார். மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் இவரை கடற்படை தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டது. அதன் பின் அவருக்காக கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க உட்பட கடற்படையின் பல பணிப்பாளர் நாயகங்கள் கழந்துகொன்டார்.

அதன் பின் ஜெனரல் சுபைர் மஹ்மூத் அவர்கள் கடற்படைத் தளபதி அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.  இன் நிகழ்வுக்காக பாதுகாப்பு ஆலோசகர் கரனல் சஜாட் அலி அவர்களும் கழந்துக்கொன்டார்.