ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் இன்றுடன் (ஜுலை 02) தனது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களால் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் அவருக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1982 ஆம் ஆண்டில் 11 வது ஆட்சேர்ப்பின் கடெட் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.