புறக்கோட்டை முதல் குறுக்கு தெரு கடையில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது
 

இலங்கை கடற்படையினர் இன்று (ஜுலை 07) புறக்கோட்டை முதல் குறுக்கு தெரு கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர். புறக்கோட்டை முதல் குறுக்கு தெரு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மேற்கு கடற்படை கட்டளையின் இரண்டு தீயணைப்பு குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து செயற்பட்டது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு தண்ணீர் பவுசர் கொன்ட இக்குழுவினர் மேற்கொண்ட பாரிய முயற்சியின் பின்னர் கடையில் மேலும் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.