வடக்கு கடற்படையினரால் நல்லினகாபுரம் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு
 

அண்மையில் (ஜூலை 07) யாழ் மாவட்டத்தில் நல்லினகாபுரம் கிராமத்தில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய வழிகாட்டலின் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளர் சுகாதார சேவைகள் நிருவனத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இவ் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் காங்கேசன்துறை நல்லினபுரம் கிராமத்தில் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சமூக சேவையினூடாக மாவடிபுரம் மற்றும் நல்லினகாபுரம் கிராமத்தில் வசிக்கும் புதிதாக மீள்குடியமர்த்தப்பட்ட பலபேர் தமது நோய்களுக்கான சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர்.மெலும் கடற்படையினரினால் வடக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்படும் குறித்த இச்சமூக சேவைகளை அவர்களினால் பாரட்டப்பட்டது.

மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான / நீண்டகால உடல்நல நோய்கள், அத்துடன் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன அவதானிக்கப்பட்ட பின்னர் .ஆரம்ப கட்ட சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இது வரை வட கடற்படை கட்டளையில் 25 மருத்துவ சிகிச்சைகளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையுடன் இனைந்து 08 மருத்துவ சிகிச்சைகளும் யாழ்ப்பாண தீபகற்பத்தில். நடத்தியுள்ளனர்.

நோயாளிகளுக்கு அனைத்து ஆய்வக பரிசோதனைகள் மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கடற்படையின் குறித்த சமூக சேவைக்காக அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் திரிபோசா லங்கா லிமிட்டெட் ஆகியன மருந்துவகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கின