கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜூலை, 16) மீட்டுள்ளனர்.

ரெஜிபோம் தளத்தின் மீது தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை அவதானித்த கச்சதீவு பிரிவிலுள்ள இலங்கை கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டு தமது அதிவேக தாக்குதல் படகின் மூலம் இம்மீனவர்களை காப்பற்றி உள்ளனர்.

அதிவேக தாக்குதல் படகின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட இவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர விற்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.