வெளியேறும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்று இலங்கையில் இருந்து  வெளியேறும் கர்னல் திமித்ரி மஹயிலொவ்ஸ்கி அவர்கள் கடந்த ஜுலை 18 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். கடற்படைத் தளபதி அவர்களால் அவருடைய பதவிக்காலத்தில் கடற்படைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.