சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல்  இன்றையதினம் (ஆகஸ்ட் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பளுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் சீன கடற்படையின் சிரேஷ்ட கேப்டன் டொன்க் யேன் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் சாந்க் ஜுயோந்க் ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் சீன பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்னல் ஷு ஜியேன்வெய் அவர்களும் கழந்துகொன்டார்.

நாங்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த இக் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சௌள மற்றும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்வுகளில் கழந்துகொள்வார்கள்.
129 மீட்டர் நீளம் மற்றும் 17மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 158 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் ஆகஸ்ட்,11 ஆம் திகதி  நாட்டை விட்டு புறப்படவுள்ளது.