இஸ்ஸின்பஸ்ஸகல காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்
 

மெதவச்சி, இஸ்ஸின்பஸ்ஸகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர். வன வள திணைக்களத்தினால் இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினரின் ஒரு தீ அனைப்பு வாகனம், பல தண்ணீர் பவுசர்கள் உட்பட இரண்டு அதிகாரிகளுடன் 37 கடற்படையிர் கழந்துகொன்டனர். குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.