‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

நாங்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பாக்கிஸ்தான்  கடற்படையின் ‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் அஷார் முஹமது  அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை சந்திதித்தார்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகர் சஜாட் அலி அவர்களும் கழந்துகொன்டார்.