கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவரை இன்று (ஆகஸ்ட்,13) சிகிச்சைக்காக இலங்கை கடற்படையின் 'P-439'அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

இம்மீனவர் “ரொஷான் புதா 1" மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலையிலிருந்து இம்மாதம் 04 ஆம் திகதி புறப்பட்டுச்சென்றிருந்தார். இவ்வேளையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இம்மீனவரின் சுகயீனம் தொடர்பாக மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை கடற்படையினர் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த நபரை தேடி விரைந்தனர்.

அதிவிரைவு தாக்குதல் படகினால் திருகோணமலையில் உள்ள ஃபவுல் பொயின்ட் கலங்கரை விளக்கிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் "ரொஷான் புதா 1" மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து மாற்றப்பட்டு திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அதிவிரைவு தாக்குதல்தாக்குதல் படகின் மூலம் கொண்டுவரப்பட்ட மீனவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.