இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 384 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் மின் மற்றும் மின்னணு உபுல் ஏக்கனாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி கொமடோர் கலன ஜினதாஸ இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் கட்டளை அதிகாரி மற்றும் தளபதி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. அப்போது 232 வது ஆட்சேர்ப்பில்கே.டப்.பீ.ஏ.ஐ வெலேகெதர சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றார். ஜி.ஜி.எல்.யு.எஸ் குனசேன சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார். எஸ்.எஸ்.அயேஷ் சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் கே.என்.எம் ஜயதிலக சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதையும் சிறந்த விளையாட்டு வீராங்கனியாக எச்.எம்.எஸ் மதுவந்தி விருது வென்றார்.மேலும் 232 வது ஆட்சேர்பின் 14 பிரிவுகளில் சிறந்த பிரிவாக யஷோதர் பிரிவு விருது பெற்றது.

பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்களை இந்த நிலத்திக்கு கொன்டுவர மற்றும் கடற்படையில் இணைய அனுமதி வழங்கிய அவரது பெற்றோர்களுக்கு அவரது நன்றியினை தெரிவித்தார். இந்த வீர்ர்களின் அணிவகுப்பு வெற்றி பெற வழிகாட்டிய மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு வழங்கிய பயிற்சி நிறுவனத்தின் தளபதி உட்பட பணியாளர்கள், பயிற்சி அதிகாரி, நிர்வாக வாரியத்துக்கு, பல வழிகளில் ஆதரவு வழங்கிய கடற்படை தலைமையக பணியாளர்கள், வடமத்திய கடற்படை கட்டளையின் அனைத்து நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள், திணைக்கள தளபதிகளுக்கு மனமார்ந்த நன்றியை வழங்கினார்.

மேலும் 232 வது ஆட்சேர்ப்பு பிரிவின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.