வெற்றிகரமான விஜயத்தின் பின் ‘க்ரி சுல்தான் ஹசானுடின்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ' க்ரி சுல்தான் ஹசானுடின்’ ' எனும் இந்தோனேஷியா கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 10) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக இலங்கையின் இந்தோனேசிய தூதரகத்தின் அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சென்றதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்வுகளில் மற்றும் நட்பு கைப்பந்து மற்றும் பேட்மின்டன் விளையாட்டு போட்டிகளிளும் கழந்துகொன்டனர்.