பங்களாதேஷிய கடற்படை கப்பல் “சொமுத்ரா ஜோய்” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷிய கடற்படை கப்பல் “சொமுத்ரா ஜோய்” இன்றையதினம் (செப்டம்பர் 12) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பளுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் பங்களாதேஷிய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் எம் மொனிருஷாமன் (Captain M. Moniruzzaman) உட்பட குழுவினர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. அதன் பின் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி சொமுத்ரா ஜோய் கப்பலில் கன்கானிப்பு விஜயமொன்றும் மேற்கொன்டுளார்.

115.2மீட்டர் நீளமும் 13.1மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பலில் வருகை தந்த 278 கடற்படை சிப்பாய்கள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கப்பல் இம்மாதம் (செப்டம்பர் 16 ) ஆம் திகதி நாட்டை விட்டு செல்ல உள்ளது.